×
 

எத்தனை FIR போட்டீங்க? Case போட அவ்வளவு கஷ்டமா.. லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்..!

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் வரை நிலுவையில் உள்ள FIR விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடை சட்டப் புகாரில் வழக்கு பதிவு செய்யாதது தொடர்பாக காவல் ஆணையர் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, சரமாரியான கேள்விகளை முன்வைத்த நீதிபதி, சென்னை மாநகர காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர். கள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

ஜூலை எட்டாம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் எத்தனை வழக்குகளில் புலன்விசாரணை நிலுவையில் உள்ளன என்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: பூமித்தாய் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கிறீங்க... ஐகோர்ட் வேதனை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு எதுவும் சென்றடைவதில்லை என்றும் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் மறுதேர்வா? வாய்ப்பில்ல ராஜா! ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்.. மாணவர்கள் கலக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share