×
 

#BREAKING: இடையூறு தான்! தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 7 கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இந்த நிலையில், 13வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று அவசர முறையீடு செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கறிஞர் வினோஜ் என்பவர் முறையீடு செய்தார்.

இதையும் படிங்க: கவுன்சிலர்கள விட்டு மிரட்டுறாங்க! உயிரே போனாலும் சரி… போராட்டக் களத்தில் பரபரப்பு..!

மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரவு தெரிவித்தது. அப்போது சேப்பாக்கம் மற்றும் எழும்பூர் ராஜரத்தின மைதானம் ஆகி போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மீண்டும் வழக்கறிஞர் வினோத் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறினார். 

இந்த நிலையில் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுபவர்களை அப்புறப்படுத்துங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அருகில் மருத்துவமனை உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாங்கள் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு எதிராகப் போ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தவும் நீதிபதிகள் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: PLEASE வேலைக்கு வாங்க! போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share