வெள்ளைக்காளி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... திமுக முன்னாள் நிர்வாகியை தட்டித்தூக்கிய போலீஸ்...!
பெரம்பலுாரில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி செய்த வழக்கில் வி.கே.குருசாமி கைது
திமுக முன்னாள் மண்டலத்தலைவர் குருசாமிக்கும், அதிமுக நிர்வாகி ராஜபாண்டிக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே குடும்பப் பகையாக நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, இரு தரப்பையும் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். குருசாமி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், பிரபல ரவுடியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைக்காளியை நீதிமன்றம் அழைத்துச் சென்றனர்.
கடந்த மாதம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளைக்காளியை ஆஜர்படுத்திவிட்டு புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச்சென்றபோது பெரம்பலுாரில் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததும் தமிழகத்திற்கு ஷாக்... ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்...!
இதில் தொடர்புடைய குருசாமியின் சகோதரி மகன் கொட்டு ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார். இவ்வழக்கில் வீ.கே.குருசாமியின் மகன் மணி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.குருசாமி எங்கு எந்த சம்பவ நடந்தாலும் காவல்துறையினர் தனது பெயரை சேர்த்து பொய் வழக்குப்பதிவு செய்கிறார்கள் என குற்றச்சாட்டியிருந்தார்.
இதனிடையே வெள்ளைக்காளியை கொல்ல முயற்சித்த வழக்கில் பெரம்பலுார் மங்களமேடு காவல்துறையினர் வி.கே.குருசாமியை கைது செய்து குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!