×
 

கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

சித்திரைத் திருவிழாவில் பாரம்பரிய முறையை சிதைக்காதீர்சிலைகள் மற்றும் ஆபரணங்கள் சேதமடைவதாக பக்தர்கள் வேதனை.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா தற்போது களைகட்டியுள்ள நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது நவீன பிரஷர் பம்புகளைப் (Pressure Pumps) பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு அளித்துள்ளனர். தல்லாகுளத்தைச் சேர்ந்த கள்ளழகர் பக்தர் நாகராஜன் என்பவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, விரதமிருக்கும் பக்தர்கள் தோல் பைகளில் (Leather Bags) தண்ணீர் நிரப்பி, கை பம்புகள் மூலம் அழகர் மீது தண்ணீர் பீச்சுவது பல நூற்றாண்டு காலப் பாரம்பரியமாகும். ஆனால், சமீபகாலமாக இளைஞர்கள் தோல் பைகளுக்குள் நவீன பிரஷர் பம்புகளைப் பொருத்தி, அதிவேகமாகத் தண்ணீரைப் பீச்சுவது வழக்கமாகிவிட்டது.

பிரஷர் பம்புகள் மூலம் மிக அதிக விசையில் தண்ணீர் பீச்சப்படுவதால், கள்ளழகரின் திருமேனி மற்றும் அவர் அணிந்துள்ள விலையுயர்ந்த வைர ஆபரணங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் இருக்கும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மீது இந்த அதிவேகத் தண்ணீர் படுவதால் அவர்கள் நிலைகுலையும் சூழல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது:

இதையும் படிங்க: தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

நவீன பிரஷர் பம்புகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதுடன், பாரம்பரியத் தோல் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அழகர் மீது தண்ணீர் பீச்சும் பக்தர்கள் முறையாகக் கோயில் நிர்வாகத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

தற்போது சித்திரைத் திருவிழா நடைபெற்று வருவதால், பிரஷர் பம்புகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், விதிமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை உறுதி செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறிப் பிரஷர் பம்புகளைப் பயன்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share