2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!
சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
2026- 27 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2025-26 பட்ஜெட்டில் வரி வருவாய் சுமார் 5,145 கோடி ரூபாயாகவும், செலவினங்கள் 5,214 கோடி ரூபாயாகவும் இருந்த நிலையில், சிறிய பற்றாக்குறையுடன் நிர்வகிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போன்று வருவாய் மற்றும் மூலதனச் செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை போன்ற வளரும் நகரத்தில் மக்களின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், வடிகால், கழிவு மேலாண்மை போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முதல் காலநிலை பட்ஜெட் அணுகுமுறை இந்த ஆண்டும் தொடர்கிறது. மழைநீர் வெள்ளத் தடுப்பு, நீர் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மூலதனச் செலவுகளில் 42 சதவீதம் காலநிலை தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட்டது போல, இந்த ஆண்டும் அத்தகைய திட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!
மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல சாலை, பாலம், பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள வேலைகளுக்கு நிதி தொடர்ந்து ஒதுக்கப்படும். மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் சுகாதாரம், கல்வி வசதிகள், சாலை பாதுகாப்பு, பொது இடங்கள் தூய்மை போன்றவற்றுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் இருபதாம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!