×
 

தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் டி.கே. சிவக்குமார், தமிழ்நாடு முதல்வரை ஆய்வு செய்ய அழைத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், மாநிலத் தலைமை வழக்கறிஞர் சசி கிரண் உள்ளிட்ட உயர் சட்டக் குழுவினருடன் காணொலிக் காட்சி வாயிலாக தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் சமநிலைச் சேமிப்பு நீர்த்தேக்கம் அமைப்பதில் கர்நாடக அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய நீரினைத் திறந்து விட வேண்டும் என்ற நிலுவை வழக்குகளின் சூழல் குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் டி.கே.சிவகுமார் விரிவாக விவாதித்தார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், காவிரியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீரைத் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். இந்த ஆண்டு கர்நாடகாவின் மீது வருண பகவான் கருணை காட்டவில்லை; மழைப் பொழிவு குறைவாக உள்ளதால் அணைகளில் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த யதார்த்த நிலையைத் தமிழக அரசிற்கு விளக்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

தொடர்ந்து காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாகத் தொலைபேசி வாயிலாகத் என்னிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இரு மாநிலப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாகத் தீர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேகதாது பகுதியின் உண்மையான நிலவரத்தையும், கர்நாடகாவின் நீர்நிலைகளையும் நேரில் பார்வையிட  தமிழ்நாடு முதல்வர் விஜய்க்குத் தூது அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வான்வழியாக நேரில் சென்று பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மேகதாது திட்டத்தின் பயன்கள் மற்றும் நீர் இருப்பு குறித்து விரிவாக விளக்குவதற்காகக் கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளது எனக் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share