×
 

நீயெல்லாம் மனுஷனாடா... ஊனமுற்ற நாயின் தலையை இரண்டாக பிளந்த மனித மிருகம்...!

ஊனமுற்ற நாயின் தலையை இரண்டாக பிளந்த கொடூர மிருகம்  மீது வழக்கு பதிவு

கோவை வீரகேரளம் பகுதியில் ஊனமுற்ற தெரு நாய் ஒன்று வசித்து வந்தது. இந்த நிலையிலே, வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கு வந்த நாய் குறைத்ததாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக ரவிக்குமாருக்கு, நாய் ஒன்று குறைக்கிறது என்று  தகவல் தந்துள்ளனர்.


இரவு 11 மணிக்கு நான்கு சக்கர வாகனத்தில் வந்த ரவிக்குமார், கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அந்த நாயின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மிருகத்தனமான தாக்குதலில் நாயின் தலை இரண்டாக இணைந்துள்ளது. வலியால் பரிதவித்த நாயின் அலரல் சத்தம் கேட்கவே, ரவிகுமார் தப்பி ஓடியதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ரத்தம் சொட்ட சொட்ட நாய் பரிதபிக்க, அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர் . பின்னர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் அந்த நாயை மீட்டு சீரநாயக்கன் பகுதியில் உள்ள சிகிச்சை மையத்தில் அதற்கு சிகிச்சை கொடுத்துள்ளனர். நாயின் தலையில் தையல் போட்டு தொடர்ந்து சிகிச்சை தந்து வந்திருக்கின்றனர். 21ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த நாய் இறந்துள்ளது.

இதையும் படிங்க: நாயுடன் நிர்வாண கோலம்... பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை சொருகிய காமுகன் கைது..!

இது குறித்து சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊனமுற்ற நாயே மிருகத்தனமாக அடித்து கொலை செய்த ரவிக்குமார் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: பழசா? புதுசா? - பொன்முடிக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... கண் அசைத்த ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share