×
 

உடம்ப கெடுத்துக்காதீங்க பசங்களா... மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்..!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்

தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகம் நடத்தும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. இத்தேர்வில் மொத்தம் 8,27,475 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் சுமார் 7.90 லட்சம் பள்ளி மாணவர்களும், 27,783 தனித்தேர்வர்களும் அடங்குவர். மேலும், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள 281 கைதிகளும் இத்தேர்வை எழுதுகின்றனர். இது கல்வி அனைவருக்கும் என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 250 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 64,359 பள்ளி மாணவர்களும் 3,157 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர்.இன்று முதல் நாள் தேர்வாக தமிழ் மற்றும் இதர மொழிகள் பாடத்தேர்வு நடைபெறுகிறது. பொது தேர்வு எழுத மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளார். இரவு முழுவதும் கண்விழித்து படித்து விட்டு., சரியாக தூங்காமல் சாப்பிடாமல் உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

குறிப்பிட்ட காலத்திற்குள் படியுங்கள் என்றும் மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் படித்தது தான் தேர்வில் கேட்கப்படும் என்றும் தேர்வுக்காக மூன்று ரிவிஷன் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார். மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share