×
 

இனி எவனும் தொட முடியாது..! போட்டு பொளக்க போகும் பெண் காவலர்கள்.. கீதாஜீவன் அதிரடி..!

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சரின் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த பாலியல் குற்றச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு விடுதியில் 130 மாணவர்கள் படித்து வருவதாகவும், பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி விடுதியில் சேர்ந்து ஐந்து நாட்களே ஆனதாகவும் தெரிவித்தார். 

குற்றம் சாட்டப்பட்ட காவலர் மேத்யூ மீது நல்ல முறையில் ஆன கருத்துக்களை மாணவர்கள் கூறியுள்ளதாகவும், இதுவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நிலையில் இதுவே முதன்முறை என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும், இனி பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் ஆண் காவலர்களை மாற்றம் செய்து பெண்களே இனி காவலர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்.. பாஜக மீது திருமா தாக்கு..!

அன்னை சத்யா இல்லம் மற்றும் தேவை இல்லங்கள் உள்ளிட்டவற்றில் பெண் காவலர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வார்டன் விடுமுறையில் இருந்து சமயத்தில் குற்றச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறினார். தைரியமாக மாணவி குற்றம் சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எங்கு புகார் வந்தாலும் அதனை உடனடியாக கண்காணித்து விடுவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: பிடிபடாத பயங்கரவாதிகள்! பாஜகவில் இணைந்ததாக கூட செய்தி வரலாம்... சஞ்சய் ராவத் சர்ச்சை பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share