"வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசிய உரை விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில், தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சரின் திருச்சி உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறினார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏதேதோ சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் பேசாமல் அரசியலை விட்டு ஒதுங்குவது அவருக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார். பயிர் கடன் தள்ளுபடி என்றுதான் தேர்தல் வாக்குறுதியில் கூறியதாக குறிப்பிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு வாரத்தில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுகவின் மூன்றாம் தர நபர்கள் தான் தூண்டுவதாகவும் அதனால் சில இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
அதிமுகவின் தூண்டுதல் பெயரிலும் சில இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் விஜய் சந்திக்காதது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டதாகவும் அவர் நேரம் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!
ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பிரச்சனைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது எனவும் கூறினார். முதலமைச்சர் விஜய் எப்போதும் அநாகரிகமாக பேசியது கிடையாது என்றும் கூறியுள்ளார். வாயில நல்லா வந்துடும் என முதல்வர் பேசியது தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். குற்றங்கள் எங்கு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எந்நாளும் மேகதாது அணைக்கு அனுமதியில்ல... பொறுப்பில்லாம பேசாதீங்க..! டி. கே. சிவக்குமாரை கண்டித்த நிர்மல்குமார்..!!