மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!
டெல்லியில் முடிவான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை மட்டும் தான் எடப்பாடி பழனிச்சாமி வெளியீட்டு இருப்பதாக அமைச்சர் பெரியசாமி விமர்சனம் செய்தார்.
NDA கூட்டணியில் பாஜக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் முடிவு செய்ததை சொல்லும் வெறும் அறிவிப்பாளர் பதவியால் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன பெருமை என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கேள்வி எழுப்பினார்.
அதிமுகவுக்கு தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலை காட்டிய இடத்தில் பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி நிறுத்தி இருப்பதாக விமர்சனம் செய்தார். மாப்பிள்ளை அவர்தான்., ஆனால் அவர் போட்டு இருக்கிற சட்டை என்னுடையது என்பதைப் போல அமித் ஷாவின் கணக்கை எடப்பாடி பழனிச்சாமி வாசித்து இருப்பதாக தெரிவித்தார். கடுமையான விமர்சனத்திற்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் இது வெறும் கண்துடைப்பு தான் எனவும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பிரமாதமான கட்சிகள் கூட்டணிக்கு வரப்போகிறது எனக் கூறி ஓராண்டாக ஆள் தேடிய எடப்பாடி பழனிச்சாமியால் ஒருவரை கூட அழைத்து வர முடியவில்லை என்று விமர்சித்தார். தொகுதி பங்கீட்டை டெல்லியில் முடித்து பழனிச்சாமி டம்மி தான் என தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக உணர்த்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்றும் டெல்லியில் அமித் ஷாவிடம் உத்தரவு வாங்கிவிட்டு இரண்டு நாள் கழித்து சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நீடிக்கும் இழுபறி..! மார்ச் 16ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை...!!
டெல்லியின் கண் அசைவுக்கு ஏற்ப ஆடும் பழனிச்சாமிக்கு பாஜகவினர் அதிமுக அலுவலகம் வர ஸ்டாலினே தேவைப்படுகிறார் என்றும் கூறினார். மான உணர்ச்சியோ, உரிமை உணர்ச்சியோ இல்லாமல் அமித் ஷா ஆணைக்கு காத்துக் கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி மக்களை காப்பார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாடு அணியா டெல்லி அணியா என்ற இந்த தேர்தல் போரில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்லும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!