×
 

என்னது.. முதுகில் குத்தினோமா..!! தொடர்ந்து விமர்சித்தால் இதுதான் நடக்கும்..!! திமுகவை எச்சரித்த அமைச்சர்..!!

கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியை தவிர்த்திருக்கலாம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், தமிழக அமைச்சருமான ராஜேஷ் குமார் தீவிரமான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுகவின் இத்தகைய அணுகுமுறை கூட்டணி அரசியலின் அடிப்படையையே பாதிக்கும் என்று எச்சரித்த அவர், வரலாற்று உண்மைகளை நினைவூட்டினார்.

ராஜேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாகத் தாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் பதவி சுகம் அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார். 

திமுக-காங்கிரஸ் உறவு பரஸ்பர நலன் சார்ந்தது என்று வலியுறுத்திய அவர், “தேர்தலில் திமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் உதவின. அதேபோல் காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் திமுக உள்ளிட்ட கூட்டணி வாக்குகள் உதவின. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தனது வாக்குகளால்தான் காங்கிரஸ் வென்றதாகக் கூறுவது மேலாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது” என்றார். 

இதையும் படிங்க: கோவை கொடூரம்..! "தப்ப முடியாது"..! சிறுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்குமார் வார்னிங்..!

மேலும், கூட்டத்தில் “காங்கிரஸ் ஒழிக, விசிக ஒழிக” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சித்தது கடும் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். இத்தகைய நாகரிகமற்ற செயல்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது மிகுந்த மன வருத்தத்தைத் தருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

தமிழக அரசியல் வரலாற்றை நினைவூட்டிய ராஜேஷ் குமார், “1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ அதிமுகவோ கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றிக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க மறுப்பது 60 ஆண்டுகளாகத் தொடரும் திமுகவின் பழக்கம்” என்றார். இதற்கு நேர்மாறாக, தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு வழங்கியதைப் பாராட்டிய அவர், “தவெகவின் ஜனநாயக அணுகுமுறையை ஏற்று காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இணைந்துள்ளன. இது தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்” என்று கூறினார்.

திமுக தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த ராஜேஷ் குமார், மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share