×
 

புலிப்பட வருவாயை மறைத்த உத்தமர், மிசா குறித்து பேசுவதா? தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!!

புலிப்பட வருவாயை மறைத்தவருக்கு ஊழலைப் பற்றிப்பேச என்ன அருகதை இருக்கிறது? என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் திமுக மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் மிசா சட்டம், சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட பழைய விவகாரங்களையும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். 

இதற்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கடுமையான எதிர்வினையைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் தயாநிதி மாறன், “ஊழலைப் பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே!” எனத் தொடங்கி, உள்ளூரில் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் உள்ள தொடர்பைக் கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது யார் என்றும், அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்ட வழக்கு ஆவணங்களை முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா என்றும் கேட்டுள்ளார்.

மேலும், உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒருவர், உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த தனது தந்தை மறைந்த முரசொலி மாறனைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர் எனத் தயாநிதி குற்றம் சாட்டியுள்ளார். முரசொலி மாறன் வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர் என்றும் நினைவூட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 35 நாளில் 10 கொலைகள்.. முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு: தவெக அரசை சாடிய கனிமொழி எம்பி!

2006 ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யை மேடையில் ஏற்றக் கூடாது என அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு உடனடியாக ஆட்சேபனை தெரிவித்து விஜய்யை மேடையில் நிறுத்தி மரியாதை வாதாடியது முரசொலி மாறனின் மகன்தான் எனத் தயாநிதி நினைவுபடுத்தியுள்ளார். 

அந்த நிகழ்ச்சியில் அஞ்சல்தலையைப் பெற்றுச் சிரித்தபோது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் இருந்தாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மிசாவைப் பற்றிப் பேசும் அருகதை முதலமைச்சருக்கு உள்ளதா எனக் கேட்ட தயாநிதி, போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாகத் தன்னை யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது என்றும், கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக ஒருநாள் முழுவதும் காத்திருந்து வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதை மறக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் ஆகஸ்ட் 2026 கொலைகளுக்கு எமர்ஜென்சி கால சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும் எனவும், தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share