×
 

உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு... சிபிஐ விசாரணை வேண்டும்... பந்தாடிய இபிஎஸ்...!

அவதூறு பரப்ப வேண்டாம் என்ற முதலமைச்சரின் வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து உள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். எந்த ஒரு கட்சித் தலைவரும் தனது தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வீடியோ வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன் என்று கூறினார். அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே எனவும் என்ன அவதூறு பரவியது என்று கேட்டுள்ளார்.

உங்கள் கட்சிக் காரர்கள், தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே..அந்த அவதூறா என்றும் உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது., இவை எல்லாம் வதந்தியா என்றும் பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன எனவும் கேட்டார். உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே., அதுவா என்றும் அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா எனவும் கேட்டார்.

இதையும் படிங்க: #BREAKING: DMK FAILS… ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி… சாட்டையை சுழற்றிய இபிஎஸ்…!

கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா என்று கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, சென்னை ஏர் ஷோவை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே., அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா என்றும் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்றும் இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது எனவும் சாடினார்.

உண்மை நிலை தெரிய, CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள் எனவும் சாடினார்.

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு வந்தால் கத்துக்கொடுக்கிறோம்... எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் வகுப்பெடுத்த செல்வப்பெருந்தகை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share