2030- க்குள் 7 லட்சம் வீடுகள்… நான் முதல்வன் 2.0..!! 14 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!
முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். 2030 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகள் மற்றும் நகர்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற உறுதி அளித்தார்.
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 1.25 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்று கூறினார். நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கர் உயர்த்தப்படும் என்றும் நுண்ணுயிர் பாசனம் 21 லட்சம் ஹெக்டேருக்கு உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார். 2030ம் ஆண்டுக்குள் நூறு விழுக்காடு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் 2.0 திட்டத்தின் மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி செயற்கை விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒவ்வொரு நிறுவனத்திலும் AI ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது சும்மா ட்ரைலரு தான்... மீண்டும் திமுக ஆட்சியே... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!
ஜவுளி, தோல், ஆடை, கணினி போன்ற தொழில்தூரைகளை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் சமூகநீதி விடுதிகள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 18 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். காந்தியடிகள் பெயரில் மாதிரி கிராமங்கள் திட்டம் உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக 10 ஊராட்சிகளில் உத்தமர் காந்தியடிகள் மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். 2030-ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தி 4.5 கோடி லிட்டராக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பம் மூலம் சாலைகளை விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களைகட்டிய ராட்சசபா தேர்தல்... பரிசீலனை பணிகள் மும்முரம்..!! திமுக உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு..!!