×
 

கொடைக்கானலில் நடைப்பயிற்சி சென்ற முதல்வர்..! செல்பி எடுத்து மக்கள் மகிழ்ச்சி..!

கொடைக்கானலில் நடைப்பயிற்சி முடித்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் உடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமான பிரசாரக் களைப்பைப் போக்கிக் கொள்ள குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், அவர் ஓய்வெடுப்பதற்காக மேற்கொண்ட இந்தக் குடும்பப் பயணம், அவரது அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாகவும் அமைந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த சில வாரங்களாக ஓய்வின்றி உழைத்து வந்தார். பொதுக்கூட்டங்கள், தொண்டர்களுடனான சந்திப்புகள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல் என அவரது அட்டவணை மிகவும் பரபரப்பாக இருந்தது.

இந்தக் களைப்பைப் போக்கவும், குடும்பத்துடன் சில நாட்கள் அமைதியான சூழலில் செலவிடவும் கொடைக்கானலைத் தேர்வு செய்துள்ளார். இது 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட அதே வகையான ஓய்வுப் பயணத்தை நினைவூட்டுகிறது. அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு கொடைக்கானல் சென்ற அவருக்கு அந்த இடம் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

ஏப்ரல் 25ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதல்வர், கொடைக்கானலுக்கு சென்று உள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். கொடைக்கானலில் நடைபயிற்சியை முடித்துவிட்டு காரில் திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்த சிறுமி ஒருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை அன்புடன் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 

இதையும் படிங்க: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு..! மதுரை ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலின் பளிச் பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share