ஆமாம்சாமியை வச்சுக்கிட்டு டப்பா எஞ்சின்..!! E.D. யை ஒரு கை பாத்துடுவோம்...!! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!
பழனிச்சாமி போன்ற ஆமாம் சாமியை வைத்துக்கொண்டு டப்பா என்ஜின் நடத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், மக்களிடையே விதைக்கப்படும் நல்ல கருத்துகள்தான். முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமையும். அப்படி, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் கொள்கை முகமாக 75 ஆண்டுகள் கடந்த மாபெரும் அரசியல் இயக்கமாக, மக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திசைகாட்டியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களை வழங்கியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமான ஒன்று. வன்முறை தவிர்த்து. வறுமையை வெல்வோம்!" என்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பை ஏற்கும் போதெல்லாம் இதை மனதில் வைத்துதான் மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் சிறிதும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி மத்தியில் ஆளுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, வஞ்சகத்துடன். ஓரவஞ்சனையுடன் அவர்கள் Approach செய்கிறார்கள் என்று நான் உங்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே அது நன்றாகத் தெரியும் என்று கூறினார்.
ஆளுநர்கள் மூலமாக நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரைக்கும் அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இது மட்டும்தான் அவர்களுக்கு தெரிந்த Politics எனவும் தெரிவித்தார். ஆனால், இதையெல்லாம் அரசியல் தளத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, "வளர்ச்சி அரசியல் என்றால். தமிழ்நாட்டைப் பாருங்கள்" என்று சொல்லும் அளவிற்கு Development Politics-க்கான அடையாளமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற பரந்துபட்ட வளர்ச்சி என்றார். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள். தொழிலாளர்கள். நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள், திருநர்கள். மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் 'Empower' செய்யும் Politics-யை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீர் மாற்றம்..!! திமுக - மநீம உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! பிப்.27ல் நடக்கும் என அறிவிப்பு..!!
நாங்கள் செய்திருப்பது மாதிரியான திட்டங்களை வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், 'Growth' சாதாரணமாக வந்துவிடுமா? வெற்றிகரமாக திட்டங்களையும் இத்தனை செயல்படுத்துவதால்தான் 11.19 சதவிகிதம் 'Growth' சாத்தியமாகியிருக்கிறது என்றும் பா.ஜ.க.வின் Pattern' என்ன என்று தி.மு.க. மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது என தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து தங்களின் அரசைக் கொண்டுவரப் பயன்படுத்திக்கொண்ட 'வாஷிங் மெஷினை'. இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றும் அவர்களின் N.D.A. கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான் எனவும் கூறியுள்ளார்.
இந்த இலட்சணத்தில், இப்போது E.D. C.B.I. ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள் எனவும் என்னதான் பா.ஜ.க. E.D., I.T., C.B.I. என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் பா.ஜ.க.வை நம்ப வேண்டும் என்று பழனிசாமி போன்ற ஆமாம்சாமியை பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக வைத்துக்கொண்டு 'டப்பா எஞ்சின்' எடுத்துக்கொண்டு உள்ளே வர நினைக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாதிகளின் புகலிடமா தமிழகம்? பயமா இருக்கு..!! எஸ். பி. வேலுமணி ஆதங்கம்..!!