தமிழ்நாட்டில் முதன்முறை..! 14 கோடி மதிப்பிலான கடல் ஆமை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் சென்னை கிண்டியில் அமைக்கப்படவுள்ளது. இது மாநில அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நீளமான கடற்கரை உள்ளது.
இந்தக் கடற்கரையில் ஒலிவ் ரிட்லி, பச்சை ஆமை, லெதர்பேக், ஹாக்ஸ்பில், லாகர்ஹெட் உள்ளிட்ட ஐந்து வகையான கடல் ஆமைகள் காணப்படுகின்றன. இவை பல ஆண்டுகளாக மீன்பிடி வலைகள், கடல் மாசு, கரையோர மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றால் ஆபத்தில் உள்ளன.இந்த நிலையில், கடல் ஆமைகளைப் பாதுகாக்கவும், காயமடைந்தவற்றை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் கடலில் விடுவதற்கும் ஒரு நவீன மையம் தேவை என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
2023ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மையம் கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. மையத்தில் கடல் ஆமைகளுக்கான நீச்சல் குளம், மருத்துவ அறை, சிகிச்சைப் பிரிவு, தற்காலிக தங்குமிடம், பார்வையாளர்களுக்கான வசதிகள், கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவை இருக்கும். காயமடைந்த ஆமைகளை மீட்பது, சிகிச்சை அளிப்பது, அவற்றின் இயல்பான வாழ்விடத்திற்குத் திருப்பி அனுப்புவது போன்ற பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: கன்னிமாராவில் கார்ல் மார்க்ஸ்... முழு உருவச் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!
இந்த நிலையில் 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை மையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை 2026 ஐ வெளியிட்டார். மேலும் பல்வேறு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 348.59 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நுண்ணுயிரிகள் ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஹோமியோபதி, சுகாதார நிலைய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!