ரூ.197 கோடியில் புதிய மருத்துவமனை.. அரசவைக்கும் கட்டமைப்பு! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!
வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவ மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் வந்தடைந்தது.
பின்னர் முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தினார். வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் பூக்களை தூவி முதல்வரை வரவேற்றனர். பின்னர் 197.80 கோடி ரூபாயில் வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவ மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 1.20 கோடியில் மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், 1.20 கோடியில் மதிப்பிலான திருவலம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், 50 லட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், 50 லட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், 1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ.. வழி நெடுகிலும் மக்கள் பூக்களை தூவி உற்சாகம்..!
மேலும், 60 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம், 1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டிடம், 30 லட்சம் மதிப்பீட்டில் பேரணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் 7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: சமூக நீதி பாதுகாவலர்.. கலைஞரின் அன்பு நண்பர் அவர்.. வி.பி.சிங் வரலாற்றை நினைவுக்கூர்ந்த உதயநிதி..!