×
 

24 மணி நேரமும் மக்களுக்கான அரசு... உன்னிப்பா கவனிச்சுட்டு வரோம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

விழுப்புரத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், என் கனவு என் எதிர்காலத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாவட்டங்களில் மக்களுக்கு தேவையான திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் முடிவற்ற பணிகளையும் திறந்து வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு வாக்குறுதிகளையும் மக்கள் மத்தியில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

சோழர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் வர்த்தக நகராக இருந்தது திண்டிவனம் என்று தெரிவித்தார். சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது திண்டிவனம் என்று தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறோம் என்றும் கூறினார். 4.5 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்பட்டது என்றும் மக்களின் தேவைகளை உன்னிப்பாக கவனித்து விரைவாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கும், ட்ரம்புக்கும் பயப்படாத மோடி ராகுலுக்கு பயப்படுவாரா? முதல்வருக்கு தமிழிசை பதிலடி..!

அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும் என்றும் கூறினார். மக்களின் தேவையை கண்டறிந்து அவர்கள் இடத்திற்கே சென்று தீர்வு காணப்படுவதாக தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க உச்சநீதிமன்றம் வரை சென்றதாக குறிப்பிட்டார். விதிகளை தளர்த்தி 16,94,000 பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share