×
 

நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்த தாய் கலைஞர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

உள்ளாட்சிப் பொறுப்புகளில் பங்கேற்பு உரிமை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயர் வைத்த தாய் கலைஞர் என்று தெரிவித்தார். 

என்றும் நான் உங்களில் ஒருவன்., உங்களுக்கான அனைத்தையும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றியே தீருவேன்., பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை உங்கள் அன்புக்காக தான் பங்கேற்று உள்ளேன். இது அரசியலுக்காக தேர்தலுக்காக செய்வதில்லை உள்ளன்போடு செய்வது.,வள்ளுவருக்கு கலைஞர் சூட்டிய புகழ் மாலைகளை முக்கியமானது வள்ளுவர் கூட்டம்., நான் என்பதை விட நாம் என்ற சொல்லுக்கு தான் வலிமை அதிகம்... நான் உங்களில் ஒருவன் ! திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் தீரா காதல் கொண்டிருந்தவர் கலைஞர்., திருக்குறளை தூக்கி சுமந்து தரணியெங்கும் பரப்பியவர் கலைஞர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்...அறுதியிட்டு கூறிய முதல்வர்!

 சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவத்தை காக்கக்கூடிய அரசு திராவிட மாடல அரசு., இன்று உணர்ச்சிபூர்வமான நாள்., மாற்றுத்திறனாளிகள் வாழ்வு வளம் பெற ஏராளமான திட்டங்கள் உள்ளன., அரசியலுக்காக இல்லாமல் உள்ளார்ந்த அன்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உங்களுக்காக நான் இருக்கிறேன்., உங்களுக்காக அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது எனது கடமை., இது எல்லோருக்குமான ஆட்சி, எல்லோரையும் முன்னேற்றும் ஆட்சி., வள்ளுவம் வாழ்வியல் அறியாத மாறட்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share