நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!
தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.
ஒரத்தநாடு அருகே அதித்திறன் கொண்ட மெகா நேரடி கொள்முதல் நிலையம் உள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது; தஞ்சாவூரையும் கலைஞர் கருணாநிதியையும் பிரித்துப் பார்க்க முடியாது. கலைஞர் கருணாநிதி வழியில் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன். காவிரி ஆணையம் அமைக்க காரணமானவர் கலைஞர் கருணாநிதி. ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி.
மேட்டூர் மற்றும் கல்லணைகள் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்ட சிறப்பு குழுவை தொகுப்பு திட்டத்திற்கு 82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். தஞ்சாவூரில் 70 கோடி ரூபாய் மதிப்பின் மினி டைட்டில் பார்க் திறக்கப்பட்டுள்ளது. கார், குருவை, சொர்ணவாரி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நெற்பயிர் சாகுபடி விவசாயிகள் பயனடைய 132. 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒன்றரை வருஷமா போராடி வரோம்! தஞ்சையில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாயிகள்.. குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்!!
இந்த சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். தஞ்சை மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். மேலும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும். வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் 42 கோடி புதிய பாலம் அமைக்கப்படும். கல்லணை கால்வாய் சாலை 40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!