×
 

நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

கூட்டு பிரார்த்தனை செய்ய நான் என்ன செத்தா போயிட்டேன் என அன்புமணிக்கு பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான தலைவர் அன்புமணியின் மோதல் தொடர்ந்து வருகிறது. எதையும் பொருட்படுத்தாமல் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து நடத்தி வருகிறார். இதில் ஒரு பகுதியாக தருமபுரி, சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே மணி ஆகியோர் உடல்நல குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும்.,உடல் ரீதியாக, மன ரீதியாக குணமடைய நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என அன்புமணி தெரிவித்தார். இந்த கூட்டு பிரார்த்தனை விவகாரம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

எம்எல்ஏ அருள் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கொந்தளித்துப் போன சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், டேய் பாவிகளா 35 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்து, 18 முறை சிறை கண்டேன், 135 நாட்கள் நானும் ரத்தினமும் சிறையில் இருந்தபோது, மும்பைக்கும், டெல்லிக்கும் ஓடியவர்கள் இன்று மேடையில் வீர வசனம் பேசியதை பார்த்து பலர் ஏளனமாக சிரித்ததை கண்டோம்., அச்சிறுப்பாக்கம் இடைத்தேர்தலில் அண்ணன் அன்புமணியோடு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது பிறந்த எனது மகள் டாக்டர் எழிலை 28 நாட்களுக்கு பிறகே முதன்முதலில் பார்த்தேன்., என்றெல்லாம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம் எல் ஏ. அருள், கூட்டு பிரார்த்தனை செய்ய நான் என்ன செத்தா போய்விட்டேன் என்று அன்புமணிக்கு கேள்வி எழுப்பினார். அன்புமணி தன்னிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார் என்றும் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஶ்ரீகாந்த் கைது.. சீமான் சொன்ன வார்த்தை..! விழிப்பிதுங்கிய முக்கிய தலைகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share