பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!
சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருளுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆர். அருள். இந்தத் தேர்தலில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது, அவற்றில் அருளின் வெற்றியும் ஒன்று.
ஆர். அருள், பாமகவின் முக்கிய எம்எல்ஏவாகவும், கட்சியின் அரசியல் முடிவுகளில் செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார். அவரது செயல்பாடுகள், குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு, பாமகவின் தற்போதைய அரசியல் உத்திகளில் அவரது பங்களிப்பை பிரதிபலிக்கின்றன.
இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!
இந்த நிலையில், தலைமைச் செயலகம் வந்த பாமக எம்எல்ஏ அருள் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருள் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்துள்ளார். உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!