பதவிக்காக பெத்த அப்பனையே விட்டு போறாரு.. அன்புமணியை விளாசிய MLA அருள்..!
பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் என அன்புமணி ராமதாசை பாமக எம்எல்ஏ அருள் கடுமையாக சாடினார்.
பாமகவில் தந்தை மகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருவருக்கும் இடையே சமரச முடிவு எட்டப்படும் என்று காத்திருந்த தொண்டர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில் மோதல் மீண்டும் உச்சத்தை அடைந்தது. ராமதாசை அன்புமணி வசை பாடுவதும், அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைப்பதும் என சென்று கொண்டிருக்கிறது. பதவிக்காக அன்புமணி இப்படி செய்கிறாரே என ஒரு பக்கம் பேசும் நிலையில், தனது அப்பாவாக இருந்தால் இப்படி பேசுவாரா என்று அன்புமணி ஒரு பக்கம் கூறி வருகிறார்.
ராமதாஸ் சொல்லி தான் பாஜக பொது கூட்டணி வைத்தேன் என்று அன்புமணி கூறுகிறார்., ஆனால், அன்புமணியும் அவரது மனைவி சவுமியாவும் கெஞ்சி கேட்டதால்தான் பாஜகவோடு கூட்டணி வைத்தேன் என்று ராமதாஸ் சொல்லி வருகிறார். இப்படி தந்தைக்கு மகனுக்கும் இடையிலான கருத்து மோதல் முற்றி வருகிறது. இருப்பினும் ராமதாசுக்கு பிறகு எங்கள் சின்னையா தான் என்று பாச மழை பொழியும் பாமகவினரும் இருக்க தான் செய்கின்றனர். மகன் ஆதரவாளர்களை தந்தையும், தந்தை ஆதர்வாளர்களை மகனும் மாறி மாறி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டங்களை கூட இருவரும் தனித்தனியாக நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!
இந்த நிலையில் பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் 45 ஆண்டு காலமாக தொடர்ந்து நியமனங்களை வழங்கி வருகிறார் என கூறினார். கட்சியின் தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை பொறுப்பாளர்களை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்த தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூறினார்.
அன்புமணி தலைவராக இருக்கும் காலகட்டத்திலும் அதுதான் நடைமுறை. ராமதாஸிடம் இருப்பது விசுவாசிகள் கூட்டம்., இந்த விசுவாசிகள் கூட்டம் அப்படியே அன்புமணியின் பக்கம் நிற்கும்.,ஆனால் அவர், பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் என்று தெரிவித்தார். எதிர்காலத்தில் அன்புமணி ஒரு தவறாத தவறான உதாரணமாக மாறிவிடவாரோ என்ற பயம் இருக்கிறது எனக் கூறிய அருள், சமூக ஊடகங்களில் திட்டுவதற்காகவே ஒரு நூறு பேர் இருக்கிறார்கள்.ஆனால், அவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை., வாக்காளர்கள் ராமதாஸ் பக்கம் தான் இருக்கின்றனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!