மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!
மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் பழைய வழக்குகள் பதற வைக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் ஆன நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் போராடி வந்தனர். சந்தேகம் அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30 வயதான முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று தகவல் கசிந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவரது பழைய வழக்குகள் பதற வைக்கின்றன. தற்போது பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முனீஸ்வரன் 2020 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றவர் என்று கூறப்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே கீழ ஈரால் என்ற இடத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்களை குறி வைத்து குற்றம் நிகழ்த்துவது இவனது வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது. மூதாட்டி கொலை விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றவாளி பிடிபடாமல் இருந்த நிலையில் பிறகு முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு இருந்தார். நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனீஸ்வரன் இந்த கொடூர செயலை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!
வேறு வழக்கில் சிறை சென்று விட்டால் சந்தேகம் விடாது என்பதால் முனீஸ்வரன் இப்படி செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சென்றபோது பிளஸ் டூ மாணவியை அவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய குற்றங்களை செய்துவிட்டு காவல்துறையினரை தாக்கி விட்டு செல்வது இவனது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!