×
 

நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளை ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்பவர் உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளை ஏறி சாதனை படைத்த தமிழ் நாட்டை சேர்ந்த பெண்மணி. இவர் எவரெஸ்ட் மலை உட்பட மற்ற ஆறு உயரமான சிகரங்களை ஏறி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான இவர், தனது முதல் முயற்சியிலேயே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை புரிந்தவர். 34 வயதான முத்தமிழ் செல்வி என்பவர் ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளர். இவர், எவரெஸ்ட், கிளிமஞ்சாரோ, எல்ப்ருஸ், அகோன்காகுவா, வின்சன் மாசிஃப், புன்காக் ஜயா ஆகிய உலகின் 7 உயரமான மலைகளை ஏறி சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்துக் கூறினார். உயிரை பணையம் வைத்து இச்சாதனையை சாத்தியமாக்கி இருக்கும் அவருக்கு என் பாராட்டுகள் என்றும் ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும் நம்மை சந்தித்து அவரது அடுத்தடுத்த மலையேற்றம் குறித்த தகவல்களையும் அதில் உள்ள சவால்களையும் பகிர்ந்து கொள்வார்.

அவருடைய வெற்றிப்பயணத்திற்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை துணை நின்று வருகிறது என்பதில் பெருமை கொள்கிறோம் எனவும் கூறினார். தங்கை முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட, அவரைப்போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share