கொள்கை, கத்திரிக்காய் ஒன்னும் இல்ல... தவெக தொப்புள் கொடி அறுக்காத குழந்தை..! சிபிஐ முத்தரசன் விமர்சனம்..!!
தமிழக வெற்றி கழகம் குறித்து சிபிஐ முத்தரசன் கருத்து தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்பது தொப்புள்கொடி அறுக்கப்படாத குழந்தை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான இந்தப் புதிய கட்சி, தனிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களை கைப்பற்றிய போதிலும், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளிடமிருந்து “அனுபவமின்மை” என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
ஒரு புதிய கட்சி ஆட்சியைப் பிடித்தவுடன் எப்படி நிர்வாகம் செய்வார்கள்? அனுபவம் இல்லாமல் எப்படி மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுந்தன. இந்தக் கேள்விகள் தேர்தல் பிரச்சாரத்திலிருந்தே தொடங்கி, ஆட்சி அமைக்கும் கட்டத்திலும், அதற்குப் பின்னரும் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: யாருடைய பினாமி அண்ணாமலை?! யாருக்காக இயக்கம் துவக்கம்?! முத்தரசன் விளாசல்!
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தொப்புள் கொடி அறுக்காத குழந்தை என்று சிபிஐ முத்தரசன் தெரிவித்தார். தவெகவிற்கு கொள்கை, கோட்பாடுகளும் இல்லை, ஒரு கத்தரிக்காயும் இல்லை என்று கூறினார். தவெக ஆட்சி இன்னும் தொப்புள் கொடி அறுக்காத குழந்தை என்றும் அது வளர வளர தான் எப்படி இருக்கும் என்று தெரியும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!