×
 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

ஜெயலலிதா பெண் சக்தியின் வெளிப்பாடு; மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி வாயிலாக 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று தனது 131-வது உரையில், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை மற்றும் தேச பக்தி குறித்து நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டினார்.

மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த தலைவர்களில் 'அம்மா' ஜெயலலிதாவும் ஒருவர். வரும் பிப்ரவரி 24-ம் தேதி அவரது பிறந்தநாள். அவர் ஒரு மகத்தான தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியின் (Nari Shakti) உண்மையான வெளிப்பாடாகத் திகழ்ந்தவர்" எனப் புகழ்ந்தார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஜெயலலிதா எடுத்த கடுமையான மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் இன்றும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அவரது தேச பக்தி மிகப்பெரியது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநிலத்திற்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்தவர் அவர். எனது பதவியேற்பு விழாக்களில் அவர் நேரில் கலந்துகொண்ட நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன. அவரது சிந்தனைகள் எப்போதும் தெளிவாக இருக்கும்" எனத் தனது நட்பு ரீதியான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இன்றும் நான் தமிழகத்திற்குச் செல்லும்போதெல்லாம், ஜெயலலிதா மீது மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பாசத்தையும் மரியாதையையும் என்னால் உணர முடிகிறது. அவரைப் பற்றிக் குறிப்பிடும்போதே தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசம் தெரிகிறது என பிரதமர் மோடி நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், டெல்லியில் அண்மையில் நடந்த ஏ.ஐ. மாநாடு 2026 குறித்தும் குறிப்பிட்டார். "கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், பால் பண்ணைகளை 24 மணிநேரமும் ஏ.ஐ. உதவியுடன் கண்காணிப்பதிலும் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் உலகத் தலைவர்களையே வியக்க வைத்துள்ளது. விவசாயத் துறையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது" எனத் தெரிவித்தார்.

சமூக நலனுக்காகவும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை நாடு என்றும் மறக்காது என்பதற்கு ஜெயலலிதா ஒரு சிறந்த உதாரணம் எனப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். 

இதையும் படிங்க: ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share