மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம்..! தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை..!
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் ஆதரவாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின. பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன.
இதையும் படிங்க: பணப்பட்டுவாடா செய்ய போட்டா போட்டி.! திமுக, அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதக வேட்பாளர்..!
இந்த நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் ஆதரவாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் சோதனையில் மயிலை வேலுவின் ஆதரவாளர் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தியமூர்த்தி வீட்டில் இருந்து தற்போது வரை இரண்டு கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் வெங்கட்ரமணனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தேர்தல் எதிரொலி..! தென் மாநிலங்களுக்குச் செல்ல விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு..!!