அப்பாவை பாக்கணும்... ரவுடி நாகேந்திரன் இறுதிச் சடங்கில் பங்கேற்க மகன் அவசர முறையீடு...!
தனது தந்தை நாகேந்திரன் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி மகன் அஸ்வத்தாமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். ஆம்ஸ்ட்ராங் உடனான பகை, நாகேந்திரனின் குடும்பத்தின் அரசியல் ஆகிரமிப்பிலிருந்து தொடங்கியது. அவரது மகன் என். அஸ்வத்தாமன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர்., அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங்குடன் நில விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி நாகேந்திரன் ஏ1, சம்போ செந்தில் ஏ2, நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் ஏ3 ஆக அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்...!
இதனிடையே, ரௌடி நாகேந்திரன் மரணம் அடைந்த நிலையில் தனது தந்தை இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி மகன் அஸ்வத்தாமன் அவசர முறையீடாக மனு தாக்கல் செய்துள்ளார். அஸ்வத்தாமன் மனு தொடர்பாக செம்பியம் காவல் ஆய்வாளர் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது! தேவைப்பட்டால் விஜயும் "ARREST"... அமைச்சர் துரைமுருகன் உறுதி...!