×
 

SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!

பள்ளியை கூட பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இயலாத அரசாக திமுக இருக்கிறது என நயினார் குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வலுவாக குற்றச்சாட்டுகளை கையாளுகின்றனர்.

அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பள்ளியில் கூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசால் இயலவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என்று கூறியுள்ளார். சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்றுக் கொடுப்பதை விடுத்து, ஆசிரியர்கள் எனும் போர்வையில் சில காமக் கொடூரர்களைத் திரியவிட்டு, சிறுமிகளின் பாதுகாப்பைப் பறிப்பது தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!

இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்று மேடையெங்கும் கோஷமிட்டு, சமூகநீதியின் காவலர்களாக நாடகமாடி விளம்பரம் வெளியிடுவதில் மட்டுமே கவனமாக இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைத் தூக்கியெறியும் திமுக அரசு தூக்கியெறியப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share