×
 

புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

திருவண்ணாமலை பாலியல் கொடூரத்தை நயினார் நாகேந்திரன் கண்டித்து உள்ளார்.

புனித பூமியான திருவண்ணாமலையில் பெண்ணுக்கு எதிராக கொடூரம் அரங்கேறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்ட தவெக கண்டிப்பதாக கூறினார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு செய்து இருப்பதாக கூறினார்.

மேலும், அவரை அரைநிர்வாணப்படுத்தி ஆபாசப் படம் எடுத்து மிரட்டியுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார். பக்தி மணம் கமழும் புனிதமான திருவண்ணாமலையில், இத்தகைய மிருகத்தனமான சம்பவம் அரங்கேறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேடைகளில் மகளிர் உரிமை குறித்தும், புதியதொரு மாற்றம் குறித்தும் வாய்ஜாலம் காட்டி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இன்று முந்தைய திமுக அரசைப் போலவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறி முழுமையாக முடங்கிக் கிடக்கிறது என்று சாடியுள்ளார். மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைப் பகுதியிலேயே 10 பேர் கொண்ட கும்பல் இத்தகைய துணிகரமான குற்றத்தில் ஈடுபடுகிறது என்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்றார்.

இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!

இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலில் தற்போது பிடிபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, தலைமறைவாக உள்ள மற்ற அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share