கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!
கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே வைத்திருக்கும் திமுகவை ஒட்டு மொத்தமாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நயினார் தெரிவித்தார்.
கொலைகாரர்களின் கூடாரமாக திமுக மாறிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு சச்சரவில், உதவித் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவமூர்த்தி என்பவரை, அப்பகுதி திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நயினார் கூறியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகால திமுகவின் அவல ஆட்சியில், “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
ஆனாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களை அடிமைகள் போலவும், பொம்மைகள் போலவும் நடத்தும் திமுகவினரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலினின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்றார். “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!
அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், தறிகெட்டுத் திரியும் தமது கட்சிக் காரர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் கட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சம்பவம் லோடிங்...!! - இன்று மாலை அதிரப்போகும் தமிழக அரசியல் களம்... நயினார் அதிரடி அறிவிப்பு...!