×
 

ஆட்டு மந்தையில் ஓநாய்..! பெண்கள் பாதுகாப்பை சூறையாடும் திமுக... நயினார் தாக்கு..!

பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு சூறையாடுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் திமுக அரசை விமர்சிக்கும் வகையில் நிகழ்ந்தன. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இதனிடையே, முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கழிவறையில் பெண் காவலர்களை செல்போன் மூலம் காணொளி எடுத்துள்ளதாக வரும் தகவல் குறித்து குறிப்பிட்டுள்ள நயனார் நாகேந்திரன் திமுக அரசை சரமாரியாக சாடினார். பெண்களின் பாதுகாப்பை திமுக அரசு சூறையாடுவதாக விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை புரிந்த முதல்வருக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்ற பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி காணொளி எடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசின் புதிய செம்மொழி இலக்கிய விருது..! சாகித்ய அகாடமி பிரச்சனைக்கு மாற்றாக அறிவிப்பு..!

தான் பங்கேற்ற அரசு விழாவில், சீருடையணிந்த பெண்களுக்குக் கூட இம்மியளவும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ள கேவலபட்ட ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் தமது துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுகவை வரும் தேர்தலில் விரட்டியடிப்பது ஒன்றே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒரே வழி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share