×
 

மம்தா சேலையயை கடன் வாங்கிக் கட்டிக்கோங்க ஸ்டாலின்... நாஞ்சில் சம்பத் விளாசல்....!

திமுகவினர் காலி மைதானத்தை பார்த்து பேச துணிந்து விட்டனர். அன்பழகனுக்கு ஏன் பொதுக்கூட்டம் நடத்தவில்லை. 

புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  அக்கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத், ராஜ்மோகன், லயோலா மணி ஆகியோர்  பங்கேற்றனர்.

இதன்பினர் பேசிய நாஞ்சில் சம்பத்: திமுக ஊருக்குலைந்து விட்டது. உதயநிதிக்கு பிறந்தநாள் அவர் பிறந்ததே தப்பு. அதில் வேறு பிறந்த நாளா. ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். 30 நாள் கூட்டம் நடத்துவார்கள் கூட்டத்தைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். திமுகவினர் காலி மைதானத்தை பார்த்து பேச துணிந்து விட்டனர். அன்பழகனுக்கு ஏன் பொதுக்கூட்டம் நடத்தவில்லை. 

பாஜகவை எதிர்ப்பதாக நாடகம் போடுகிறீர்கள் உண்மையிலுமே எதிர்கிறீர்களா. நிதி ஆயோக் மாநாட்டிற்கு நான்காண்டு காலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போகவில்லை. ஆனால் நெருக்கடி வருகிறது உதயநிதியின் நெருங்கிய நண்பராக இருக்கக்கூடிய பண பரிவர்த்தனை செய்கின்ற ஒரு கும்பல் இருக்கிறது. டான் பிக்சர்ஸ் அவர்களுக்கு தயாரிக்கின்ற படம் அதில் வர செலவினம் அதில் உள்ள பணவர்த்தனை அமலாக்க துறையின் கண்காணிப்புக்கு வந்த பிறகு விசாகன் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை டான் பிக்சர்ஸ் இன் உதயநிதி நண்பர்களின் வீட்டின் சோதனை இதையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்த தன் மகனை கை வைப்பார்கள் என்று எண்ணி பிள்ளை பாசத்தால் டெல்லியில் நடந்த நிதி ஆயோர் கூட்டத்தில் பங்கேற்றார். 

இதையும் படிங்க: “சின்னப்பையன் சீமான்.... இனி உனக்கு ஒரு பையன் ஓட்டு போடமாட்டான்...”  - நாதகவை நாறுநாறாக கிழித்த நாஞ்சில் சம்பத்....!

தமிழ்நாட்டின் பிரச்சனைக்காக அவர் செல்லவில்லை நீங்கள் போக மாட்டீர்கள். சதானத்தை பற்றி உதயநிதி பேசினார். பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் சென்று அந்த வழக்கில் ஆஜரானார். மற்ற எந்த மாநிலத்திற்கும் வழக்கிற்காக ஆஜராகாமல் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் பாஜகவிற்கும் உங்களுக்கும் கள்ள உறவு இருக்கிறது என்று விஜய் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. 

எந்த மத்திய அரசை எதிர்த்து நீங்கள் போராடுகிறீர்கள் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். நாடாளுமன்றம்  அதிரும்படி பேசியதுண்டா. ஆண்மையைக் கொண்டு வர வாக்காளர்கள் வயாகரா மாத்திரையா கொண்டுவர முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் படைக்கலனாக இருக்கிறீர்களா மோடியின் தொடைக்கலனாக இருக்கிறீர்களா. நாடாளுமன்றம் ஸ்தம்பிக்க வேண்டாமா.

எஸ்ஐஆர் திருத்த பணியில் கல்கத்தா குலுங்க சேலை கட்ட பெண்மணி போராட்டம் நடத்துகிறார். மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார் அவரை உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். மம்தா பானர்ஜிக்கு உள்ள துணிச்சலில் ஆயிரத்தில் ஒரு பங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இருக்கிறதா. அவர் அணியும் சேலையை ஒரு மாதத்திற்காவது கடனாக வாங்கிய அணியுங்கள் அப்போதாவது உங்களுக்கு துணிச்சல் வருகிறதா என்ற பார்ப்போம். 

உங்களுக்கு ஒரே நோக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக  உதயநிதியை ஆக்க வேண்டும் என்பதே. இதற்காக தான் திமுக தொடங்கப்பட்டது அண்ணா இதற்காக தான் திமுகவை தொடங்கினாரா. 

திமுக எங்கு நிக்கிறது அமைச்சரவையில் இருப்பவர்கள் பாதி பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள்.  விஜய் காப்பியடிக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாட்டில் முதன்முதலில் ராம்ப் வாக்கை அறிமுகம் செய்தது விஜய் தான் விக்கிரவாண்டியில். எங்களைப் பார்த்து தான் சுழல்கிறீர்கள் நாங்கள் தான் உங்களை சுழல வைக்கிறோம். 

ஜனநாயகம் படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியா கோலாலம்பூரில் நடக்கிறது லட்சக்கணக்கான மக்கள் சந்திக்கிறார்கள். விஜய் சர்க்கார் நடத்த சொன்னால் விஜய்யை மனசில் வைத்து கட்சி நடத்துகிறீர்கள் ஆட்சி நடத்துகிறீர்கள். குறை சொன்னால் அதை சரி செய்யுங்கள் குற்றத்தை சொன்னால் அதை சரி செய்யுங்கள் விஜய் பற்றி பேசுவதற்கு நாக்கு சுளுக்குகிறது அட்டைக்கத்தி என்று உதயநிதி விமர்சனம் செய்கிறார் அட்டை கத்தி தான். விஜய்க்கு வரும் கூட்டத்தை போல் கூட்ட முடியுமா காசு கொடுத்தால் கூட கூட்டத்தை கூட்ட முடியுமா. 

300 பேரை கூட்டுவதற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்கிறீர்கள்.  மக்களிடமிருந்து அந்நியமாகி விட்டீர்கள் என்று ஒத்துக் கொள்ளுங்கள். 5000 கொடுத்து விட்டால் வாக்களித்து விடுவார்கள் என்று நம்புகிறீர்களா.  விஜயின் விஸ்வரூபம் உறக்கத்தை கலைக்கிறது. தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் முன் பணம் கொடுத்து அச்சாரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அதை தாண்டி ஹிமாலயா வெற்றி பெறுவதற்கு தவெக்காவிடம் திட்டமிடுகிறதோ இல்லையோ நாட்டின் மக்களின் அன்பு குவிந்திருக்கிறது. 

பாலியல் குற்றம் அதிகரித்து இருக்கிறது அதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது பள்ளி மாணவர் கையில் போதை பொருள் வருகிறது இதை தடுப்பதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டில் டிஜிபி இல்லை. ஒரு பொறுப்பு டிஜிபியை வைத்து ஏன் நிர்வாகம் நடத்துகிறீர்கள். உள்துறையுடன் ஆலோசனை பெற்று டிஜிபி நியமித்தால் அந்த டிஜிபி போடுகின்ற கட்டளை நிறைவேற்ற வேண்டியது வரும். 

பிச்சை காசு போடுவதை போல் ஒரு பொறுப்பு டிஜிபி வைத்திருந்தால் உங்கள் கட்டளையை நிறைவேற்றும் டிஜிபியாக அவர் இருப்பார் அதனால்தான் டிஜிபி நியமிக்கவில்லை இதற்கான காரணத்தை கூற முடியுமா.  நீங்கள் செய்யும் எந்த திட்டமும் மக்களிடம் சேரவில்லை மக்கள் அதை விரும்பவில்லை. 

கடைசியாக உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். ஸ்டாலின் வாக்கிங் செல்லும் பொழுது உங்கள் கனவு என்ன என்று கேட்டபோது ஜனநாயகன் படம் எப்ப வரும் என்று கேட்டதுடன் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்.  இந்த ஆட்சி எப்போது போகும் என்று கேட்கிறார்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக மீது கோபம் அலை வீசுகிறது எனக்கூறினார். 

இதையும் படிங்க: இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share