210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியின் தொகுதி உடன்பாட்டிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பியூஷ் கோயல், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசுயா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுக்கு 27 தொகுதிகள் கூட்டணியில் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார். பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றதாக கூறியுள்ளார். என் டி ஏ கூட்டணி உணர்வுபூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணி என்று தெரிவித்தார். எஞ்சிய கட்சிகளுக்கான தகுதிகள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார். தாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுவதாக விமர்சித்தார்.
இன்று அனைத்து தலைவர்களும் அதிமுக அலுவலகத்திற்கு வந்து உடன்பாட்டில் கையெழுத்து போட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தங்களின் டெல்லி பயணத்தை வைத்து முதலமைச்சர் அவதூறு பரப்புவதாகவும் கூறியுள்ளார். 20 நாட்களாக காங்கிரசுக்கும் திமுகவுக்கும் வார்த்தைக்கு ஒரு நடந்து கொண்டிருந்ததாகவும், தங்கள் நோக்கம் திமுகவை அகற்ற வேண்டும் என்பதே எனவும் கூறினார்.
இதையும் படிங்க: "FLASH BACK"... 9 வருடங்களுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் கால் வைத்த TTV தினகரன்..!!
டிடிவி தினகரன் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு வந்ததை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஏன் அவர் வந்தது கஷ்டமாக இருக்கிறதா என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். யாராலும் தங்கள் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்தார். மூன்றே பொழுதில் ஒப்பந்தம் முடிந்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சசிகலாவை கூட்டணியில் சேர்க்க ஐடியாவே இல்ல..! எதற்காக அமித் ஷா உடன் சந்திப்பு?.. டிடிவி தினகரன் விளக்கம்..!!