×
 

டெல்லியைப் பிளக்கும் போராட்டம்..! களமிறங்கிய காங்கிரஸ்... 5 முக்கிய கோரிக்கைகள்.!!

டெல்லியில் போராடி வரும் காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு தொடர்பாக ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் இல்லம் நோக்கி பேரணையாக செல்ல காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். சாலையில் அமர்ந்து காங்கிரஸ் ஆர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் உள்ளிட்டோரும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டக் களமாக மாறி உள்ள டெல்லியில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். 

இருப்பினும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஐந்து முக்கிய கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. நீட் முறை கேட்டற்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நீட் முறை கேட்டு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் வரும் ராகுல்காந்தி! தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றம்! 77 புதிய மாவட்ட தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

நீட் முறை கேட்டு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களை குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share