×
 

நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

நீட் எதிர்ப்புப் போராட்டத்தை முழுக்க முழுக்க ஆதரிப்பதாகவும் இப்போராட்டம் புரட்சியாக மாறும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும், கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து தமிழகக் காவல்துறை அத்துமீறினால் தீவிர விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக எச்சரித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அளித்த அதிரடிப் பேட்டியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை நாங்கள் முழுக்க முழுக்க ஆதரிக்கிறோம். இந்தப் போராட்டங்கள் நாடு முழுவதும் மேலும் வலுப்பெற வேண்டும்.

இதையும் படிங்க: ஆட்சியை ஆதரிச்சிட்டு பொதுவெளியில் சாடுவதா? கூட்டணி தலைவர்களை வெளுத்து வாங்கிய வைகோ!

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடும் இந்த இயக்கம், மிகப்பெரிய சமூக மற்றும் அரசியல் புரட்சியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

நீட் வினாத்தாள் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை மத்திய அரசமைச்சரவையில் இருந்து உடனடியாகத் தூக்க வேண்டும். அவருக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே புகுந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழகக் காவல்துறை இதுபோன்று அத்துமீறினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை! தவெக கூட்டணி வெற்றிக்கு முழு மூச்சாக உழைப்போம்!! வைகோ விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share