×
 

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... ரீஃபண்​ட் குறித்து வெளியான அதி முக்கிய அறிவிப்பு...!

நீட் தேர்வு கட்டணம் திரும்பப் பெற விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்; ஜூலை 14 வரை வாய்ப்பு

நீட் (NEET) தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஜூலை 14 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய மாணவர்கள், தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்காக தங்களது வங்கி கணக்கு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்கான கடைசி தேதி நேற்று இரவு 11.50 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுவரை சுமார் 9 லட்சம் மாணவர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 13 லட்சம் மாணவர்கள் இதுவரை வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 14 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்த மாணவர்கள், அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்ளவும் இந்த அவகாசம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 21-ல் கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கம்! நீட் தேர்வை முன்னிட்டு சென்னை கோட்டம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share