×
 

தென்காசி, நெல்லை அரிவாள் வெட்டு சம்பவத்தில் அதிரடி திருப்பம்... கைதான 6 பேரில் 5 பேருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது.  தப்பி ஓடிய போது 5 பேருக்கு கை முறிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 பேர் கொண்ட மர்மகும்பல் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் புகுந்து சாலையோரங்களின் நின்று கொண்டிருந்த 6  இளைஞர்களை கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர். 

மேலும் வெறி அடங்காத முகமூடி அணிந்த மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து நெல்லை மாவட்டம், பிரம்மதேசம், மானூர் தெற்குப்பட்டி உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.  அந்த நேரத்தில் வரும் வழிகளில் எல்லாம் பார்ப்பவர்களை தாக்கி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தெற்குப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் இருவரையும் வெட்டினர். 

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 8 பேரும் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்தனர். 

இதையும் படிங்க: ஸ்டன் ஆன நெல்லை...!! - ஒரே வாரத்தில் 2வது அதிர்ச்சி சம்பவம்... 5 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...!

 அவர்களையும் காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இந்த அதிகாலை நெல்லை மானூர் பதுங்கி இருந்த இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.  அடிப்படையில் காவல்துறையினர் அந்த ஆறு பேரை கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். 

அப்பொழுது 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் போலீசிடம் இருந்து தப்பி ஓட முயன்ற 5 பேருக்கு கை முறிவு  ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த சண்முகக்குட்டி என்கிற சண்முகசுந்தரம், நந்து,வேல்கார்த்திக்,  கோவில்குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சிறுகன்குறிச்சியைச் சேர்ந்த பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் நெட்டூரைச் சேர்ந்த சண்முகநாதன் என்கிற ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

.

 

 

இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கல்லால் அடித்து இளைஞர் கொலை... நெல்லையில் அரங்கேறிய பயங்கரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share