×
 

பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

உதகை நகரில் மின் கம்பிகள் மீது மரங்கள் தொடர்ந்து விழுந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை எடுத்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கன மழையும், பகல் நேரங்களில் விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது.

குறிப்பாக பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து வருகின்றன. குறிப்பாக தொட்டபெட்டா - தும்மனட்டி நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. அதேபோல உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மறியல் பூங்கா பகுதியில் மனம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில் மின் கம்பம் பலத்த சேதம் அடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உதகையில் இருந்து முத்திரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலாரு, எமரால்டு, எடக்காடு, அவலாஞ்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் சாலையின் இருப்பிடமும் நீண்ட தூரத்திற்கு வரிசாக நின்றன. 

இதையும் படிங்க: ஹைஅலர்ட்டில் ஊட்டி... நாளை முதல் இந்த சுற்றுலா தளங்களை மூட உத்தரவு...! 

சம்ப இடங்களுக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி  அகற்றினர்.  மேலும் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் அகற்றபட்டு சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளபட்டது. இதனால் தொட்டபெட்டா - தும்மனடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை - அவலாஞ்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது எடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை,  அவலாஞ்சி, 8 th மைல், படப்பிடிப்பு தளம், பைன் பாரஸ்ட், கேரன்ஹில், 9th மைல் ஆகிய சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்படுதாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share