லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!
மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னை அண்ணா சாலையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மின்வாரியத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்தடை குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மின்வாரியம் 2.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
முறைகேடுகள் மற்றும் லஞ்சம் இல்லாமல் மின்துறை செயல்படும் என்று உறுதியளித்த அவர், டெண்டர் முறையில் பின்பற்றப்படும் நடைமுறை, நிலக்கரி எங்கிருந்து வருகிறது என ஆய்வு செய்து வருகிறோம். எனவும் தெரிவித்துள்ளார். மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட கோழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்வாரியத்தை அடிப்படையிலிருந்து சீரமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மின்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லா துறைகளிலும் முதல்வர் கவனம்..! தவெக புது வெர்ஷன்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றும் இது போன்றவர்கள் மீண்டும் பணிக்கு வராதபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70000 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், சீரான மின்வினியோகம் அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!