×
 

"9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்கும் திட்டம் தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், அறிவிப்புக்கு பிறகு ஒரு தசாப்தத்துக்கு மேல் கடந்தும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில், அரசியல் கட்சிகளிடையே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தற்போதைய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்த தாமதத்தை சுட்டிக்காட்டி, “மதுரை எய்ம்ஸ்-ஐ 9 வருடமா கட்றாங்க, இந்நேரம் ஒரு அணையே கட்டியிருக்கலாம். ஆட்சி புரிந்தவர்கள் மாறி மாறி குற்றம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்” என்று கூறியுள்ளார். 

2015 பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்த ஐந்து புதிய AIIMSகளில் ஒன்று மதுரைக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக அரசு பல இடங்களை முன்மொழிந்தது. 2018-ல் தோப்பூர் இடம் இறுதி செய்யப்பட்டது. 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். திட்டம் சுமார் 222 ஏக்கர் நிலத்தில், ஆரம்பத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் தொடங்கியது. பின்னர் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதி உதவியுடன் ரூ.2,000 கோடிக்கு மேல் செலவு உயர்ந்தது. 

நிலம் ஒதுக்கீடு, எல்லைச் சுவர் கட்டுமானம் போன்ற ஆரம்பப் பணிகள் முடிந்தாலும், முழு கட்டுமானப் பணிகள் 2024-ல் தான் தீவிரமடைந்தன. L&T நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. தற்போது கட்டுமானப் பணிகள் சுமார் 47% முடிந்துள்ளதாக RTI பதில் தெரிவிக்கிறது. மருத்துவக் கல்லூரி 2026-ல் செயல்படத் தொடங்கவும், முழு மருத்துவமனை 2027 ஆம் ஆண்டு தயாராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள்இந்த திட்டத்தின் தாமதம் பல ஆண்டுகளாக மத்திய-மாநில அரசுகளிடையே பலத்த விவாதத்துக்கு உள்ளானது. 

இதையும் படிங்க: திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

மதுரை எய்ம்ஸ் தாமதம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஒன்பது வருடமாக மதுரை எய்ம்ஸ் கட்டப்பட்டு வருவதாகவும் இந்த தாமதத்தை ஒரு அணையை கட்டியிருக்கலாம் என்றும் ஒப்பிட்டு அமைச்சர் குற்றம் சாட்டினார். “மதுரை எய்ம்ஸ்-ஐ 9 வருடமா கட்றாங்க, இந்நேரம் ஒரு அணையே கட்டியிருக்கலாம்” என்று கூறினார். ஆட்சி புரிந்தவர்கள் மாறி மாறி குற்றம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share