கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
கொங்கு மண்டல தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என, வேட்பாளர் நேர்காணலுக்கு வந்த தி.மு.க.,வினரிடம், முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று கொங்கு மண்டல தொகுதிகளுக்கு நடைபெற்றபோது, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்பு அதிர்ச்சிகரமான கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்திய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்த பிறகு கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? நடிகர் விஜய்யின் த.வெ.க. வருவது தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு நிலவரம் என்ன?” என பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கட்சி நிர்வாகிகளும், வேட்பாளர் விருப்ப மனுதாரர்களும், “கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை எதிர்கொள்ள தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்கக் கூடாது. அப்படி ஒதுக்கினால் வெற்றி கடினமாகிவிடும்” என்று திட்டவட்டமாகக் கூறினர்.
இதையும் படிங்க: சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியா? துரைமுருகனுக்கு திமுக போட்ட கன்டிஷன்! அமைச்சர் பதவிக்கு ஆப்பு!
நேர்காணலுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் பாலு, முதன்மை செயலர் நேரு, அமைப்புச் செயலர் பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், தி.மு.க. தலைமை தீவிரமாக வேட்பாளர் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுச்சேரிக்குப் பிறகு தென் மாவட்டங்கள், இப்போது கொங்கு மண்டலம் என நேர்காணல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொங்கு மண்டலத்தில் த.வெ.க. தனித்து களமிறங்குவது தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், நிர்வாகிகள் “கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருப்பது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட்?... அறிவாலயத்திற்கு குடைச்சல் தரும் திருமா... மூணு கன்டிஷன்களில் மொத்தமும் காலி...!