×
 

அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் - பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்.

தென்னாட்டு காந்தி’ என்று போற்றப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அண்ணாவின் ஆளுமை மற்றும் திராவிட அரசியலின் வெற்றி குறித்து உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா மறைந்தாலும், அவர் உருவாக்கியக் கொள்கைகளும் பெயர்களும் தமிழகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளதாக முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம் எனத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அண்ணாவின் பெயரை நிலைபெறச் செய்தது கழக அரசுதான். நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்: 4 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

ஏய்! தாழ்ந்த தமிழகமே!’ என்று அண்ணா எழுப்பியக் குரல், தமிழகமெங்கும் இன எழுச்சியை ஏற்படுத்தியது. ‘ஆரிய மாயை’ மூலம் தமிழ் இதயங்களில் விழிப்புணர்வை விதைத்தவர் அவர் என்று புகழாரம் சூட்டினார். நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா முழங்கியபோதுதான், வட மாநிலத்தவர்கள் தமிழர்களின் தனித்துவத்தைப் புரிந்து கொண்டனர்" என வரலாற்றுத் தருணத்தை நினைவு கூர்ந்தார்.

தற்போதைய அரசியல் சூழலை அண்ணாவின் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு மற்றும் நிதி நெருக்கடி எனப் பல வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut தான் பதில்!"

நான் செய்தவை அனைத்தும் தொடர்ந்தால், அப்போதும் அண்ணாதுரைதான் ஆள்வதாக அர்த்தம் என்று அண்ணா அன்று சொன்னதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், இன்று வரை திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அண்ணாதான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். தமிழகமே அண்ணாவைப் படி; அண்ணா வாழ்க! அவர் மூட்டிய தீ பரவட்டும் என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.


 

இதையும் படிங்க: பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share