தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடக்கம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை, இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற அருகிலுள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்த முக்கியமான பருவநிலைக் காலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை மாநிலத்தின் ஆண்டு மழையளவில் சுமார் 48% முதல் 50% வரை பங்களிக்கிறது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பயனடைகின்றன. இருப்பினும், இந்த மழை சில நேரங்களில் புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தையும் உண்டாக்குகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது என அறிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காரைக்கால் பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். நடப்பாண்டு 50 சென்டிமீட்டர் அளவுக்கு வடகிழக்கு பருவமழை இருக்கும் என்றும் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதிகளில் தென்மேற்கு பருவ மழை விலக சாத்திய கூறுகள் உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சில்லென மாறிய சிங்கார சென்னை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!!
அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை 16, 18 ஆம் தேதி துவங்குவதற்கான சாத்தியம் உள்ளது என்றார். வழக்கத்தை விட அதிக வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி சேலத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களே குடை கொண்டு போங்க! 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...