×
 

தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது.

நாம் தமிழர் கட்சி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை உறுதிப்படுத்தி, அனைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே கட்டத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக அமைந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், பிப்ரவரி 21, 2026 அன்று திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில்தான் கட்சி தனது முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எந்தக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடுவதாக சீமான் தெளிவாக அறிவித்தார். தமிழகத்தின் பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவற்றுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி தனித்துப் போராடும் நிலைப்பாட்டை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. மாநாட்டின் மிக முக்கிய அம்சமாக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். இதில் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என சம விகிதத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. இது ஆண்-பெண் சமத்துவத்தை கட்சி கொள்கையாகக் கொண்டாடும் வகையில் அமைந்தது. வேட்பாளர்களில் பலர் பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற படித்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

தேர்தலை நோக்கி மிக தீவிரமாக களமாடி வரும் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026-யை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. 

இதையும் படிங்க: குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share