×
 

சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!

திமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் சமீப காலங்களில் நிகழ்ந்த மிக முக்கியமான திருப்பங்களில் ஒன்றாக, முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் உடன் திமுகவில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ், 1973-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பெரியகுளம் நகரச் செயலாளர், தேனி மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்த அவர், பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக உயர்ந்தார். அவரது இறப்புக்குப் பிறகு, அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் பல சர்ச்சைகளுக்கு இடையே மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பேற்றவர்.

ஆனால், 2022-இல் எடப்பாடி கே. பழனிசாமியுடனான மோதலால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி போராட்டங்களை நடத்தினார். கட்சியில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தார். இதே நிகழ்வில் அவரது மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர். 

இதையும் படிங்க: அடடே..! முதல்வர் தலைமையில் 50 ஆயிரம் பேர் திமுகவில் ஐக்கியம்..!! மாஸ் காட்டும் OPS..!!

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் விருப்ப மனு கொடுத்தார். கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் போட்டியிட வேண்டும் என முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளார். ஓபிஎஸ்க்காக போடி தொகுதியிலும், தனக்காக ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி... பாஜகவின் திடீர் கரிசனம்... பதில் சொல்வாரா ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share