×
 

பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் 100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக நெல்லையில் 2 வதாக சமையல்காரரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்யப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி பிரமுகர்கள் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

தமிழக அரசு கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கின் தன்மையை அறிந்து சிபிசிஐடி மாற்றியது. அதனைத் தொடர்ந்து பழனி உடுமலைப்பேட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த வழக்கை தொடர்புடையவர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

அதன் தொடர்ச்சியாக நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியில் உள்ள மேடை அலங்கார ஊழியர் சண்முகசுந்தரம் என்பவரது வீட்டில் தற்பொழுது நெல்லை சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் 3 மணி நேரத்திற்கு மேலாக தற்பொழுது நீடித்து வருகிறது. 

சிபிசிஐடி காவல்துறையினர் சண்முகசுந்தரத்தின் வீட்டிற்குள் நுழைந்ததும் கதவுகள் ஜன்னல்கள் அனைத்தையும் அடைத்தனர். இந்த விசாரணையில் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகள் உட்பட அனைவருமே குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தனித்தனியாக பேசி வருகின்றனர். 

மேலும் சண்முகசுந்தரம் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கோயில் விழாக்களுக்கு டெக்கரேஷன் செய்வதும் திருமண நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேஷன் செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 


அடுத்த கட்டமாக நெல்லை சிபிசிஐடி காவல்துறையினர் 2வதாக நெல்லை பாளையங்கோட்டை வி என் சத்திரம் திருவள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்த சமையலர் குமரகுரு என்பவரது வீட்டிற்கு வந்து தற்பொழுது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இங்கேயும் குமரகுரு மற்றும் அவரது மனைவி குழந்தைகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நில மோசடி தொடர்பான ஆவணங்கள் எதுவும் சிக்குகிறதான குமரகுரு வீடு முழுவதும் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share